பத்திரிக்கையாளர்களுக்கு கூகுள் புதிய திட்டம் – புதிய முயற்சிகள் வரவேற்பு!!
பத்திரிக்கையாளர்கள் வணிக தொடர்பான புதிய முயற்சிகளை செயல்படுத்துவதற்கு உலகின் சிறந்த தேடுபொறி நிறுவனமான கூகுள் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய திட்டம்:
உலகம் முழுவதும் கொரோன நோய்த்தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் பல துறைகளும் சரிவடைந்தது. இதனால் வர்த்தக நிறுவனங்கள் அதிக பாதிப்புகளை அடைந்தது. பல நிறுவனங்கள் இழப்பை சமாளிக்கும் பொருட்டு தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்தும், ஊதியத்தை குறைந்து வருகிறது. பல நிறுவனங்கள் சரிவை சமாளிக்க முடியாமல் தொழிலை நிறுத்தி விட்டனர்.
மேலும் 6 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில், கூகுள் நிறுவனம் வணிக அடிப்படையிலான ஒரு புதிய தொழில் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இருந்து வணிக ரீதியான ஒரு புதிய செயல்திட்டத்தை வைத்திருந்தால் அதற்கு கூகுள் உதவி செய்யத் தயாராக உள்ளது என்று ஜிஎன்ஐ (GNI) ஸ்டார்ட்அப் தொடக்க முகாமின் இயக்குநர் பிலிப் ஸ்மித் கூறியுள்ளார். 2021 கூகுள் நியூஸ் இனிஷியேட்டிவ் (GNI) ஸ்டார்ட்அப் தொடக்க முகாமுக்கான விண்ணப்பங்கள் அமெரிக்கர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
பத்திரிகைத் துறை சார்ந்த புதிய முயற்சிகளைத் தொடங்க விரும்புவோர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அதில், சிறந்த 24 பேரை தேர்வு செய்து பயிற்சிகள் வழங்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும். பயிற்சிகள் செப்டம்பர் 7 முதல் நவம்பர் 5 வரை (ஒரு வார இடைவெளியுடன்) நடைபெறும் என்றும் இதற்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதியுடன் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியுடன் சேர்த்து நிதியுதவியும் அளிக்கப்படும் என்றும், அமெரிக்கர்களைத் தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் கனடா நாட்டினருக்கும் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.