தமிழக 6 – 9 ம் வகுப்பு மாணவர்களுகான புதிய திட்டம் – பள்ளி கால அட்டவணையில் மாற்றம்?
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றலை மேம்படுத்த அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மாணவர்களிடம் கலை திறனை மேம்படுத்தும் வகையில் கலை பண்பாட்டு செயல்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கலை பண்பாட்டு செயல்பாடு:
தமிழகத்தில் பள்ளிகளில் தற்போது மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை சரி செய்ய பள்ளிக்கல்வித்துறை இல்லம் தேடி கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை திறம்பட செயல்படுத்தியும் வருகிறது. அதனை தொடர்ந்து தொடக்க நிலை வகுப்பு மாணவர்களுக்கு எழுத்து மற்றும் எண்களை கற்பிக்க எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பசியின்றி கல்வியை கற்பிக்கும் நோக்கில் மதிய உணவு திட்டத்தை தொடர்ந்து காலை சிற்றுண்டி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த கட்ட கல்வி மேம்பாட்டு திட்டமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே கல்வி இணைச் செயல்பாடுகளை ஊக்குவிக்க 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி கால அட்டவணையில் கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் வாரம் ஒரு நாள், கலை பண்பாட்டு கொண்டாட்டம் என்ற பெயரில் வகுப்பு நடத்தி அதன் மூலம் பாரம்பரிய கலை பண்பாட்டு பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
ஜாக்கிரதை மக்களே.. தமிழகத்தில் இந்த இடங்களில் 4 நாட்களுக்கு மழை – வானிலை மையம் அறிக்கை!
Exams Daily Mobile App Download
இந்த வகுப்புகள் மூலம் மாணவர்களின் மன அழுத்தம் குறையும் என்றும் அவர்களின் கல்வி அறிவு மேம்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒவ்வொருவரின் தனி திறமையையும் வெளிக்கொணரப்படும் என்றும் கூறுகின்றனர். இந்த கலை பண்பாட்டு செயல்பாடு வகுப்புகளில் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். அத்துடன் வெற்றி பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்