தெற்கு ரயில்வேக்கான புதிய அட்டவணை – நிர்வாகம் தகவல்!
சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் ரயில்களுக்கான புதிய அட்டவணையை ரயில்வே நிர்வாகம் தயாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பல புதிய ரயில்களின் அறிவிப்பு இடம் பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
புதிய ரயில்வே அட்டவணை
இந்தியாவில் உள்ள பொதுப்போக்குவரத்தில் மக்களால் அதிகம் வரவேற்கப்படுபவற்றில் முக்கியமான ஒன்று ரயில் பயணங்கள் தான். ஏனென்றால் மிக குறைந்த செலவு மற்றும் பாதுகாப்பான வழியில் இலக்கை அடைய உதவும் இத்தகைய ரயில் பயணங்கள் மக்களின் விருப்பமான போக்குவரத்தாக இருந்து வருகிறது. இந்த ரயில் பயணங்களை இன்னும் எளிதாக்கும் நோக்கத்தோடு சென்னை முதல் தெற்கு மார்க்கமாய் பயணிக்கும் ரயில்களுக்கான புதிய கால அட்டவணையை தயாரிக்கும் பணிகளில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த புதிய அட்டவணையுடன் சேர்த்து சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் ரயில்களின் வேகம் அதிகரிப்பதோடு, பல புதிய ரயில்களின் அறிமுகமும் இருக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘சென்னையில் இருந்து துவங்கும் தெற்கு ரயில்வேயில் நுாற்றுக்கணக்கான விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆணும் இந்த ரயில்களுக்கான புதிய கால அட்டவணையை வெளியிடும் போது பயணிகளின் கோரிக்கைகள் அதில் சேர்க்கப்படும்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – புதிய வகுப்புகள் அறிமுகம்! அமைச்சர் தகவல்!
அந்த வகையில் இந்த ஆண்டும் நிர்வாக ரீதியான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். இதனுடன் தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை தயாரிக்கப்பட்டதும் அவற்றை அடுத்த மாதம் வெளியிடுவோம். இதில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் பயண நேரத்தை குறைக்கும் வகையில் விரைவு ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். மேலும், பல புதிய வழித்தடங்களில் புதிய ரயில்களை இயக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கூடுதல் தகவலாக இந்திய ரயில்வே, சமீபத்தில் IRCTC முன்பதிவுகளின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.