Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – அசத்தல் திட்டங்கள் அறிமுகம்!
இந்திய அஞ்சல் துறை தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி அதில் பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகிறது. இந்த திட்டங்கள் நல்ல லாபத்தையும் தருகிறது. சில சேமிப்பு திட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
சேமிப்பு திட்டங்கள்:
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வங்கிகளுக்கு இணையாக அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில் வங்கியை விட சிறந்த லாபத்தை அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் கொடுக்கிறது. சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி தொகை கிடைப்பதால் முதிர்வு காலத்தில் சேமிப்புடன் சேர்த்து கூடுதல் வட்டித்தொகையும் கிடைக்கிறது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஏற்ப மாறுபடுகிறது. ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் நல்ல பலனை அளிக்கிறது. முதலீடு செய்யும் பணம் அப்படியே இருக்கும், வட்டி வாயிலாக வருமானமும் கூடுதலாக கிடைக்கும்.
ரயில்வே தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் கவனத்திற்கு – சிறப்பு ரயில்கள் இயக்கம்!
அந்த வகையில் தொடர் வைப்பு நிதி திட்டத்தில் தற்போது 5.8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களின் வருமானத்திற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்கலாம். இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். RD கணக்கில் தவணை தொகையை செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டால், ஒவ்வொரு மாதமும் ரூ.100 அல்லது 150 வரை அபராதம் விதிக்கப்படும். இத்திட்டத்தில் 1 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை முதலீடு செய்யலாம். ஞ்சலகத்தில் கணக்கு வைத்துள்ளவர்கள் நெட் பேங்கிங் வசதியுடன் ஆன்லைன் மூலம் பணத்தை செலுத்தலாம்.
Exams Daily Mobile App Download
அடுத்ததாக தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் 6.8% வட்டி வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதனால் இத்திட்டம் முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதில் வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.1000 தொகையை முதலீடு செய்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.1389.49 ஆக பெறலாம். பங்குச் சந்தை கடுமையாக சரிந்துள்ள நிலையில் முதலீட்டாளர்கள் மேற்கண்ட திட்டங்கள் குறித்து பரிசீலனை செய்யலாம்.