Post Officeல் 37 லட்சம் வரை ரிட்டன்ஸ் தரும் சிறப்பு திட்டம் – முழு விவரம் இதோ!
அஞ்சல் துறையின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் அதிக லாபத்தை பெறலாம். மேலும் இதில் வட்டி விதமும் அதிகமாக வழங்கப்படுகிறது. இப்பதிவில் பிஎப் குறித்த முழு விவரங்களை காண்போம்.
பொது வருங்கால வைப்பு நிதி:
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் முதிர்வு காலத்தில் நல்ல லாபத்தை அளிக்கிறது. சேமிப்பு . ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் நல்ல பலனை அளிக்கிறது. பல எண்ணற்ற சேமிப்பு திட்டங்கள் அஞ்சலகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. இதில் பொது வருங்கால வைப்பு நிதி பிரபலமான திட்டமும் ஒன்று. இதில் ஒரு நபர் ஒரு நாளைக்கு 417 ரூபாய் முதலீடு செய்தால், மாத முதலீட்டு மதிப்பு சுமார் 12,500 டெபாசிட் செய்யலாம்.
தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை!
அதே ஒரு வருடத்திற்கு உங்களது பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் ரூ.1,50,00 வரை சேமிக்க முடியும். பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். தேவைப்பட்டால் முதிர்வுக்கு பிறகும் 5 ஆண்டுகளாக திட்டத்தை நீட்டித்து கொள்ளலாம். இதில் 25 வயதுள்ள ஒருவர் தனது 50 வயது வரை கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் வரை தொடர்ந்து செய்து வந்தால் ரூ.1.03 கோடி வரை திரும்ப பெற முடியும். இதில் வட்டி சேர்க்காமல் ரூ.37 லட்சம் முதலீடு தொகையாக இருக்கும்.
இந்த PPF திட்டத்தில் ஆண்டுதோறும் 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. மேலும் வட்டி விகிதமானது காலாண்டிற்கு ஒரு முறை மாறுபடுகிறது. ஒவ்வொரு மாதமும் 1 முதல் 5 ஆம் தேதிக்குள் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். அப்போது தான் உங்களுக்கு சரியான வட்டி தொகை வழங்கப்படும். பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வருமான வரி பிரிவு 80-சி யின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையில் வரி விலக்கு உண்டு. இந்த திட்டத்தில் 15 ஆண்டு காலம் முதிர்வு காலம் தேவைப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பிறகு கணக்கை முடித்து கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்