பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் – ரூ.100 இருந்தாலே சேமிப்பை தொடங்கலாம்! முழு விவரம் இதோ!
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேருவதன் மூலம் பல வகையான நன்மைகளை பெற முடியும். மேலும் இத்திட்டம் குறித்த முழு தகவலையும் இப்பதிவில் காண்போம்.
பொது வருங்கால வைப்பு நிதி:
இந்தியாவில் 1968-ல் நிதி அமைச்சகத்தின் தேசிய சேமிப்பு நிறுவனத்தால் ஓய்வூதியத்திற்கான பணத்தை சேமிக்கும் வகையில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் மூலம் நமது மாத வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை சேமிக்கப்படுகிறது. மேலும் பாதுகாப்பான முதலீடை செய்ய நினைப்பவர்களுக்கு இது சிறந்ததாகும். அதிகபட்சமாக இத்திட்டத்தில் ரூ. 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத்தொகைக்கான நல்ல வட்டியும் வழங்கப்படுகிறது. மேலும் குறைந்தது ரூ.100 இருந்தால் போதும் PPF கணக்கை தொடங்கலாம்.
திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – மே 17 இல் திருவிழா! முன்னேற்பாடுகள் தீவிரம்!
ஒவ்வொரு நிதியாண்டும் ரூ.500 செலுத்தினால் கூட போதும். இப்போது உங்களால் பெரிய தொகையை சேமிக்க முடியும். PF மீதான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிற்கும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டு முதல் PF பங்களிப்பு உள்ளவர்களுக்கு 2 கணக்குகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 2.5 லட்சத்திற்கு PF பங்களிப்பு வைத்திருப்பவர்களுக்கு வரி விதிக்கப்படும் என்றும் அதற்கு குறைந்த கணக்கிற்கு வரி கிடையாது என்று EPFO தெரிவித்துள்ளது. மேலும் தற்போது பி.எஃப் மீதான வட்டி 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இந்த PPF-ல் 15 ஆண்டுகள் லாக்-இன் பீரியட் இருக்கிறது. இதில் PPF திட்டமிடப்பட்ட நிதி இலக்குகளை அடைய பயனுள்ளதாக இருக்கும். PPF முதலீட்டை உங்கள் நிதி இலக்குகளுடன் சீரமைத்தால், வரி சலுகைகளை பயனாளர்கள் பெற முடியும். PPF என்பது உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் ஒரு முக்கிய பகுதியாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மேலும் அவ்வப்போது EPFO அமைச்சகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டு வருகிறது. அதனை கருத்தில் கொண்டு முதலீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.