Post Office பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் அம்சங்கள் – முக்கிய விவரங்கள் இதோ!

0
Post Office பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் அம்சங்கள் - முக்கிய விவரங்கள் இதோ!
Post Office பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் அம்சங்கள் - முக்கிய விவரங்கள் இதோ!
Post Office பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் அம்சங்கள் – முக்கிய விவரங்கள் இதோ!

மத்திய அரசு 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு என்று சிறப்பாக செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சில சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் அனைத்து சிறப்பம்சங்கள் குறித்தும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

செல்வமகள் சேமிப்பு திட்டம்:

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தபால் நிலையம் பொதுமக்களின் நலன் கருதி பல சேமிப்பு திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கணக்கு தொடங்கி அதன் மூலம் பலனடைந்து கொள்ளலாம். நமது முதலீட்டை மிகவும் பாதுகாப்பாகவும், அதிக லாபத்தையோடும் பெறுவதற்கு சிறந்த வழி அஞ்சல் அலுவலகம் தான். ஒவ்வொரு திட்டத்திற்கும் என்று அரசு தனியான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் முதிர்வு காலத்தில் நமக்கு அதன் வட்டியோடு சேர்த்து பணம் பத்திரமாக கிடைக்கும். இந்த பதிவில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை பற்றிய அனைத்து தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க டிச.28 கடைசிநாள்!

இந்த திட்டத்தின் மத்திய அரசின் பெயர் சுகன்யா சம்ரிதி யோஜனா. பெண் குழந்தைகளுக்கு மட்டும் என்று தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியின் கீழ் அனைத்து அஞ்சல் துறை அலுவலகத்திலும், அரசு வங்கிகள் அல்லது ஒரு சில தனியார் வங்கிகளிலும் தொடங்கி கொள்ளலாம். முதன் முதலில் ஜனவரி 22ம் தேதி 2015ம் ஆண்டு பிரதமர் அவர்களால் தொடங்கப்பட்டது. குறைந்தபட்சமாக ரூ.1,000 செலுத்தி, அதிகபட்சம் ஒரு குடும்பத்தை சேர்ந்த 2 பெண் குழந்தைகளுக்கு இந்த திட்டம் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற குழந்தைகள் மட்டுமே இதன் மூலம் பலனடைய முடியும். குடியுரிமை மாறும் பட்சத்தில் திட்டத்தின் வட்டியை பெற முடியாது.

PF பயனர்கள் கவனத்திற்கு – இனி EPF கணக்கில் இது கட்டாயம்? முக்கிய அறிவிப்பு!

ஆன்லைன் மூலமாகவும், பணம் செலுத்த முடியும், குறைந்த பட்சம் ஒரு நிதியாண்டில் ரூ.1000 செலுத்த வேண்டும். 14 ஆண்டுகள் அல்லது திருமணம் வரை பணம் செலுத்திக் கொள்ளலாம். குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ,1,50,000 வரை வைப்புத் தொகையாக செலுத்தலாம். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு உங்கள் தொகைக்கு 7.6% வட்டி வழங்கப்படும். கணக்கு இடையில் நிறுத்தப்பட்டால் ரூ.50 சேவைக் கட்டணமாக செலுத்தி புதுப்பிக்கலாம். இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் தொகைக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. பெண் குழந்தைக்கு 18 வயது அடையும் போது கல்வி அல்லது திருமண செலவுகளுக்காக பணத்தில் இருந்து 50% ஐ பெற்றுக் கொள்ளலாம். வேறு வங்கிகளுக்கு மாற்றும் போது ரூ.100 செலுத்தி மாற்றிக் கொள்ளலாம். தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் 31,000 கணக்குகள் தொடங்கப்பட்டு, இதுவரை சுமார் 4 கோடி ரூபாய் நிதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!