தொழிலாளர் சட்டத்தின் படி அக்.1 முதல் புதிய விதிமுறைகள் – முழு விவரங்கள் இங்கே!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அக்டோபர் 1 முதல் வரைவு தொழிலாளர் சட்டத்தின் படி பல மாற்றங்களை கொண்டு வர வாய்ப்புள்ளது.
வரைவு தொழிலாளர் சட்டம்:
தொழில் & வர்த்தக நிறுவனங்களில் இன்னும் உள்ள பலவிதமான அமைப்புகளிலும் உழைத்து வரும் தொழிலாளர்களின் நலனை காத்து அவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை தடுத்து அவர்களுடைய உரிமைகளை காப்பதற்காக இந்திய அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி உள்ளது. தொழிலாளர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் சூழ்நிலையை முறைப்படுத்துவதற்காக இந்திய அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை இயற்றியுள்ளது.
மத்திய அரசின் புதிய ட்ரோன் விதிகள் 2021 வெளியீடு – உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அக்டோபர் 1 முதல் தொழிலாளர் சட்ட விதிகளில் பல மாற்றங்களை அமல்படுத்த உள்ளது. புதிய தொழிலாளர் சட்டத்தின்படி, ஊழியர்களின் வேலை நேரம் 9 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிக்க இருக்கிறது. புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்திய பிறகு ஊழியர்களின் கையில் கிடைக்கும் மாத ஊதியம் மாறுபடும். புதிய சட்டத்தின் படி, ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மொத்த சம்பளத்தில் 50% அல்லது அதற்கு மேல் இருக்கும்.
புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்திய பிறகு மொத்த சம்பளத்தில் மற்ற படிகளும் மாற வாய்ப்புள்ளது. அடிப்படை சம்பள உயர்வினால் ஊழியர்கள் மாதந்தோறும் பெறும் ஊதியம் தொடர்பில் இருப்பதால் ஊழியர்களின் PF ஐ பாதிக்கும். அதாவது அடிப்படை ஊதிய உயர்வினால் PF தொகையும் அதிகரிக்கும். இதனால் மாத சம்பளத்தில் ஊழியர்களுக்கு அதிக பிடித்தம் செய்யப்படும்.
TN Job “FB Group” Join Now
அதே சமயம், ஊழியர் ஓய்வுக்குப் பிறகு பெறும் தொகையான கிராஜுவிட்டி மற்றும் PF தொகை அதிகமாக கிடைக்கும். மேலும், புதிய விதியின் படி, 15 முதல் 30 நிமிடங்களுக்குள் கூடுதலான வேலை நேரங்கள் ஓவர் டைம் ஆக கணக்கிடப்படும். முன்னதாக 30 நிமிடங்களுக்கு குறைவான நேரம் ஓவர் டைம் ஆக கருதப்படவில்லை.