தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – கூட்டுறவுத்துறை உத்தரவு!
தமிழகத்தில் ரேஷன் அட்டை மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இருப்பினும் தற்போது ரேஷன் கார்டுதாரர்களின் கைரேகை பதிவாகாத பட்சத்தில், கருவியில் கார்டை ஸ்கேன் செய்தும், கார்டு எண்ணை பதிவிட்டும், உணவு பொருட்கள் வழங்க வேண்டும் என ரேஷன் கடை பணியாளர்களுக்கு கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது.
புதிய அறிவுரை:
தமிழகத்தில் பொதுவாக நியாய விலைக் கடைகளின் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் பலசரக்கு பொருள் என்று குறைந்த விலையில் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் குடும்ப அட்டைகள் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்ட பிறகு ஸ்மார்ட் கார்டுகள் அதற்கான கருவியில் ஸ்கேன் செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டது. இம்முறையில் யார் வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.
தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு? உள்ளாட்சி தேர்தலுக்கு பின் வெளியாகும் அறிவிப்பு!
இதில் மோசடியை தடுக்க குடும்ப அட்டைதாரர்களே ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்க கைரேகை பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. இம்முறையில் குடும்ப அட்டையில் இடம் பெற்றிருப்பவர்களில் யாராவது ஒருவர் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று கைரேகை பதிவு செய்த பிறகே பொருட்கள் வாங்க முடியும்.இந்த முறையில் தான் அனைத்து ரேஷன் கடைகளிலும் தற்போது பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் சமீபகாலமாக கைரேகை பதிவு இயந்திரங்களில் தொலைதொடர்பு சிக்னல் மற்றும் சர்வர் பாதிப்பு ஆகிய காரணங்களால், கைரேகை பதிவு செய்வதில் பாதிப்பு ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியது. இந்த பாதிப்பு காரணமாக ரேஷன் பொருட்களை , பெற முடியாமல் கார்டுதாரர்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இந்த பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும் விதமாக கூட்டுறவு துறை ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ரேஷன் கார்டின் துரித குறியீட்டை கருவியில், ‘ஸ்கேன்’ செய்து, ரேஷன் கார்டு எண்ணை கருவியில் பதிவிட்டும், பொருட்கள் வழங்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.