மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – அமலுக்கு வரும் புதிய ஊதிய விதிகள்!
புதிய ஊதிய விதி 2022 ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக முன்னதாக தகவல் வெளியாகியது. மத்திய தொழிலாளர் அமைச்சகம் சார்பாக பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் மனிதவள மேம்பாட்டாளர்களுடன் இதுகுறித்த ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் புதிய ஊதிய விதி விரைவில் அமலுக்கு வந்தவுடன் வேலை செய்வோருக்கு நிறைய சலுகைகள் கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய ஊதிய விதி:
மத்திய தொழிலாளர் சட்டங்களை ஒன்றாக இணைத்து நான்கு குறியீடுகளாக மாற்றியமைத்து புதிய ஊதிய விதியை மத்திய அரசு உருவாக்கியது . 2021 ஏப்ரல் மாதம் முதல் புதிய ஊதிய விதி அமலுக்கு வரும் என்று தகவல் வெளியானது. ஆனால் நடைமுறைச் சிக்கல் காரணமாக அக்டோபர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அப்போதும் இதை அமல்படுத்த முடியவில்லை. அனைத்து மாநிலங்களும் இதற்கு ஒப்புதல் தெரிவிப்பது போன்ற விஷயங்களால் தாமதம் ஏற்பட்டது. இந்த ஊதிய விதி அமலுக்கு வந்தால் தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
Wipro நிறுவனத்தில் 38,000 பேருக்கு வேலைவாய்ப்பு – 2023ம் நிதியாண்டில் திட்டம்! முழு விவரம் இதோ!
இந்நிலையில் விரைவில் நான்கு தொழிலாளர் குறியீடுகள் (ஊதிய விதி) அமலுக்கு வருகின்றன. இந்த விஷயத்தில் 90 %மாநிலங்கள் தொழிலாளர் சட்ட விதிகளை உருவாக்கி விட்டதாகவும், அவை விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய ஊதியக் குறியீடு அமலுக்கு வந்த பிறகு, சம்பளம், அலுவலக நேரம் முதல் பிஎஃப், பென்சன் வரை பல்வேறு விதிகளில் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தப் புதிய சட்டம் தொழிலாளர் துறையில் பணிபுரியும் முறைகள் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தின் தேவைக்கு ஏற்ப இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய ஊதியக் குறியீட்டில், 30 நிமிடங்களைக் கணக்கிட்டு கூடுதல் நேரத்தில் 15 முதல் 30 நிமிடங்கள் கூடுதல் வேலை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது, 30 நிமிடங்களுக்கு குறைவான நேரம் கூடுதல் நேரமாக கருதப்படுவதில்லை. புதிய ஊதியக் குறியீடு அதிகபட்ச வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க முன்மொழிகிறது. இது 4-3 என்ற விகிதத்தில் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது 4 நாட்கள் அலுவலகம், 3 நாட்கள் வார விடுமுறை. ஒவ்வொரு 5 மணி நேரத்திற்குப் பிறகு பணியாளருக்கு 30 நிமிட இடைவெளி கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது.
புதிய ஊதிய விதி அமலுக்கு வந்தால் ஊழியர்களுக்கான கிராசுட்டி, பிஎஃப் போன்ற அனைத்து சலுகைகளும் மொத்த சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்பது விதிமுறை. இதன்படி, நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கான மொத்த சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படை சம்பளத்தை வைத்திருக்க வேண்டும். இந்தப் புதிய ஊதிய விதி அமலுக்கு வந்த பிறகு ஊதிய கட்டமைப்பில் பெரிய மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய ஊதிய விதியால் பிஎஃப் தொகை அதிகரிக்கும்.