பான், ஆதார் அட்டை இல்லாத வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய விதிகள் அறிவிப்பு!
மத்திய நேரடி வரிகள் வாரியமானது பண பரிவர்த்தனைகளுக்கான புதிய விதிகளை அறிவித்துள்ளது. இந்த விதிகள் அனைத்தும் மே மாதம் 26ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகள்:
பான் கார்டு நமது அடையாள அட்டையாக மட்டும் இல்லாமல் வரி கணக்கு செலுத்துவதற்கு பயன்படுத்தும் முக்கிய ஆவணமாக உள்ளது. நமது பெயரில் மேற்கொள்ளப்படும் அனைத்து பண பரிவர்தனைகளையும் பான் கார்டுடன் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை மிகவும் பாதுகாப்பாக கையாளுவது அவசியமாகும். தற்போது நாடு முழுவதும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் தான் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் அதிக பயன்கள் இருக்கும் போதிலும், ஆபத்துகளும் இருக்கத் தான் செய்கிறது. மோசடி கும்பல்கள் மூலம் நிதி மோசடிகள் நடந்து வருவது அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் அரசு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது. மேலும் அதிக அளவில் பணப்பரிவர்த்தனைகள் செய்துவிட்டு வருமான வரித் துறையின் பிடியில் சிக்காமல் தப்பித்து விடுகின்றனர். இதனால் பான், ஆதார் விவரங்களை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
வங்கி விதிமுறைச் சட்டம் 1949 (10) இன் கீழ் வரும் அனைத்து வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் வகையிலும், கூட்டுறவு வங்கிகள், தபால் நிலையங்கள் சார்ந்த பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும் வகையில் ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்தால் அவர்கள் பான், ஆதார் விவரங்களை வழங்க வேண்டும். இவை மே 26ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.