அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள் என்னென்ன?
அரசின் இலவச ரேஷன் முறையை பல லட்ச தகுதியில்லாத மக்கள் பயன்படுத்தி வருவதாக தகவல் வந்துள்ளது. அதனால் மோசடி செய்யும் நபர்கள் உடனடியாக ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
ரேஷன் கார்டுகள்:
மத்திய அரசு மக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் மூலம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள பயனர்களுக்கு மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பல கோடி ஏழை, எளிய மக்கள் பயன்பெறுகின்றனர். கொரோனா கால கட்டத்தில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தமிழக அரசும் தனித்தனி குடும்ப ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ.4000 தவணை முறையில் வழங்கியது.
மாநிலத்தில் காலை 6 மணிமுதல் 9 வரை மட்டுமே பள்ளிகள் திறப்பு – அரசு முக்கிய உத்தரவு!
மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், இந்த திட்டத்தின் காரணமாக ஏராளமான மக்கள் அனைவரும் புதிய ரேஷன் கார்ட்களை பெற அதிகமாக விண்ணப்பித்து வந்தது குறிப்பிடத்தக்கது. ரேஷன் கார்டில் தற்போது புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அது என்னவென்றால் ரேஷன் கார்டு வைத்திருந்தும் அதைப் பயன்படுத்தாமல் இருந்தாலலோ வாங்கிய பொருட்களை விற்றாலோ ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதன்படி தகுதியில்லாத ஏராளமான ரேஷன் கார்டு அட்டைதாரர்கள் இலவசமாக ரேஷன் பொருட்களை வாங்கி வருவதாக மத்திய அரசுக்கு தகவல் வந்துள்ளது. அதனால் தகுதி இல்லாத நபர்கள் ரேஷன் கார்டை தாமே முன் வந்து ரத்து செய்ய வேண்டும் எனவும் அப்படி ரத்து செய்யவில்லை என்றால் அப்படிப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கபடும் என உணவுத்துறை அறிவித்திருக்கிறது.