ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – UIDAI வெளியிட்ட புதிய அறிவிப்பு!
இந்தியாவில் முக்கிய ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டை காண அங்கீகாரத்தை வழங்குவதற்கு முன்பு குடியிருப்பாளர்களின் தகவல் அறிந்த ஒப்புதலை பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதார்:
இந்தியாவில் ஆதார் அட்டை அனைவருக்கும் மிக முக்கிய ஆவணமாக விளங்கி வருகிறது. தற்போது இந்த ஆதாரை மக்கள் அடையாள ஆவணமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் ஆதார் அட்டையை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருப்பது நல்லது. ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தால் அதனை அவ்வவ்போது ஆன்லைன் வாயிலாகவே அல்லது இ- சேவை மையங்கள் வாயிலாக உடனடியாக செய்யலாம்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் ஆதார் அப்டேட் மேற்கொள்ள மற்றும் புதிய ஆதாரை பெற ஆதார் அமைச்சகம் சார்பாக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய ஆதார் அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஆதார் அட்டைக்கான அங்கீகாரத்தை வழங்குவதற்கு முன்பு குடியிருப்பாளர்களின் தகவல் அறிந்த ஒப்புதல் அவசியம் என்று தெரிவித்துள்ளது.
ஆப்கான் பெண்களுக்கு விதிக்கப்பட்ட புதிய உத்தரவு – மீறினால் நடவடிக்கை.. தாலிபான் எச்சரிக்கை!
இந்த ஒப்புதலை நிறுவனங்கள் குடியிருப்பாளர்களிடம் இருந்து காகிதம் அல்லது மின்னணு முறையில் கட்டாயம் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஆதார் அங்கீகாரத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை குடியிருப்பாளர்கள் புரிந்துகொள்வதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் UIDAI பரிந்துரைத்துள்ளது.