அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் அமல்!
ரேஷன் கார்டில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. அது என்னவென்றால் ஆறு மாதம் ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்றால் இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கார்டு செயல் இழக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது .
ரேஷன் கார்டு
மத்திய அரசு மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள பயனர்களுக்கு மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பல கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெறுகின்றனர். அந்த வகையில் உணவு தானியங்களான அரிசி, கோதுமை, எண்ணெய், சர்க்கரை போன்றவற்றை பயனர்கள் குறைந்த அல்லது மானிய விலையில் வழங்குகின்றன. மக்களின் தகுதிகளுக்கு ஏற்ப ரேஷன் கார்டு பல பிரிவுகளாக கொடுக்கப்பட்டுள்ளன.
தலைநகரில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மீண்டும் அமலாகும் ஊரடங்கு? அரசு ஆலோசனை!
முதலாவதாக உருவெடுத்த கொரோனா கால கட்டத்தில் மக்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. பலரும் வேலைக்கு செல்ல முடியாமல் திணறி வந்த நிலையில் இந்த ரேஷன் பொருட்கள் தான் ஏழை எளிய மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருந்திருக்கிறது. கொரோனாவின் போது பண தட்டுப்பாட்டை குறைக்க மாதம் 1000 ரூபாய் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரேஷன் பொருட்களை பெற வேண்டும் என்றால் ரேஷன் கார்டில் உங்க பெயர் இருப்பது மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் ரேஷன் கார்டு இல்லாமல் அவர்களின் மாதாந்திர உணவுத் தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமான ஒன்று.
ரேஷன் கார்டில் தற்போது புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அது என்னவென்றால் ரேஷன் கார்டு வைத்திருந்தும் அதைப் பயன்படுத்தாமல் இருந்தால் அந்த ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். இந்த நடவடிக்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்த விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. அதை தொடர்ந்து 6 மாதங்கள் மற்றும் அதற்கு மேல் ரேஷன் கார்டு பயன்படுத்தாமல் இருந்தால் கார்டுதாரர்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். அவர்களுக்குப் பதிலாக, தகுதியுடைய பிறர் பயன்பெறும் வகையில் இந்த விதிமுறை வந்துள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இந்த விதிமுறை இன்னும் அமலுக்கு வரவில்லை எனவும் குறிப்பிடத்தக்கது.