சேலத்தில் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? தீவிரமடையும் ஓமிக்ரான் தொற்று!
கொரோனா நோய் பரவலின் 3-வது அலை வர இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது ஓமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அதிகாரிகளுக்கு ஆலோசனை நடத்தினார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
தற்போது கொரோனா பெருந்தொற்றின் 3-வது அலை வர இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தற்போது ஓமைக்ரான் தொற்று இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் 360 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஓமைக்ரான் பரவல் தமிழ்நாட்டிலும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியோர் கவனத்திற்கு – கால அவகாசம் நீட்டிப்பு!
தற்போது ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் 27 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 24 வயது நிரம்பியவரான சேலத்தை சேர்ந்த பெண் அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். இவர் சென்னையில் 3 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனைக்கு உட்படுத்தபட்டார். அதன் பின் அவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் டிசம்பர்- 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைகிறது.
இந்தியாவின் வட மாநிலங்களில் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – பொதுமக்கள் அச்சம்!
இதனால் இன்று காலை முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தியாவில் ஒமைக்ரான் பரவலில் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. அத்துடன் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், உத்திரகாண்ட் போன்ற ஓமைக்ரான் தொற்று பாதித்த மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டிலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அதிகாரிகள் வட்டத்தில் தகவல் வெளி வந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.