Post Office & வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – மே 26 முதல் புதிய விதிமுறைகள்!

0
Post Office & வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - மே 26 முதல் புதிய விதிமுறைகள்!
Post Office & வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - மே 26 முதல் புதிய விதிமுறைகள்!
Post Office & வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – மே 26 முதல் புதிய விதிமுறைகள்!

இந்தியாவில் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் ஏற்படும் மோசடிகளை தவிர்க்க பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு ஆதார் மற்றும் பான் எண்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

இந்தியாவில் அனைத்து துறைகளிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால் நாளுக்கு நாள் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது மோசடிகளை கட்டுப்படுத்த வங்கிக் கணக்கு, மொபைல் எண் உள்ளிட்ட தனிநபர் சார்ந்தவைகளுக்கு ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கடன் மோசடிகளைக் குறைக்கவும் பான் கார்டும் ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

தமிழக அரசின் இத்துறை ஊழியர்களுக்கு 5% சம்பள உயர்வு – அமைச்சர் ஜாக்பாட் அறிவிப்பு!

இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒரு புதிய விதிமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்தாவது, வங்கிகளில் நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் பரிவர்த்தனை மேற்கொண்டால் பான் கார்டு விவரங்களை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஆண்டுக்கு ரூ.20 லட்சத்திற்கும் மேற்பட்ட பண பரிவர்த்தனைகளை ஒரு வங்கியிலோ அல்லது அதற்கும் மேற்பட்ட வங்கிகளிலோ மேற்கொண்டால் அதற்கு பான் எண் அல்லது ஆதார் எண் விவரங்களை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

அடுத்ததாக தபால் நிலையங்களில் அமல்படுத்த உள்ள புதிய விதிமுறைகளை குறித்து பார்ப்போம். தபால் நிலையங்களில் புதிய கணக்குகள் திறப்பதற்கு ஆதார் அல்லது பான் எண் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விதிமுறை வங்கிகளுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அஞ்சல் அலுவலக கணக்குகளில் ஆண்டுக்கு ரூ.20 லட்சம் அல்லது அதற்கும் மேற்பட்ட பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள பான், ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் வருகிற மே 26ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!