Infosys நிறுவன ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகள் – வலுக்கும் எதிர்ப்பு!
இன்போசிஸ் நிறுவனத்தில் சமீபத்தில் பணியை ராஜினாமா செய்த ஊழியர்களும், ராஜினாமா செய்யத் திட்டமிடும் ஊழியர்களுக்கும் பெரும் அதிர்ச்சி தரும் அளவில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்த புதிய விதிமுறைகள் மூலம் ஊழியர்கள் வெளியேற்றத்தைத் தடுப்பதற்காக போடப்பட்டு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய விதிமுறைகள்:
இந்திய மென்பொருள் ஏற்றுமதியில் முன்னோடியாக இருக்கும் இன்போசிஸ், சமீபத்தில் பணியில் இருந்து விலகிய ஊழியர்களுக்கு புதிய கண்டிஷன்களை விதித்தது. இந்த கண்டிஷன் பணியாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. மேலும் ஊழியர்களின் வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் பெரிய தடங்களாகவும் இந்த கண்டிஷன் இருக்கும் காரணத்தால், இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாட்டின் முன்னணி ஐடி ஊழியர்கள் யூனியன் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
இன்போசிஸ் நிறுவனத்தின் சக போட்டியாளர்களான டிசிஎஸ், ஐபிஎம், காக்னிசென்ட், விப்ரோ, அக்சென்சர் ஆகிய நிறுவனங்களில் இன்போசிஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளரும் போட்டி நிறுவனத்தின் வாடிக்கையாளரும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் 6 மாதம் பணியாற்ற தடை விதிக்கப்பட்டு உள்ளதாக இன்போசிஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை கண்டித்து NITES தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து ஏப்ரல் 28 அன்று, பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இன்போசிஸ் நிறுவனத்திற்கு முதல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும், NITES இலிருந்து புகார் கடிதத்தின் நகல் கிடைக்கவில்லை என்று இன்ஃபோசிஸ் தொழிலாளர் அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் NITES மே 17 ஆம் தேதிக்குள் பதிலை சமர்ப்பிக்குமாறு நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டது. இருப்பினும் புது தில்லியில் நடந்த கூட்டத்தில் ஐடி பிரதிநிதிகள் கலந்து கொள்ளாததால் இன்ஃபோசிஸ் மற்றும் தொழிற்சங்கத்துடனான கூட்டு விவாதம் மே 26 க்கு ஒத்திவைக்கப்பட்டது.