வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்தால் போதும் – புதிய வழிகாட்டுதல் பரிந்துரை!
ஜப்பான் நாட்டில் புதிய நிறுவனங்களில் பணிபுரியும் வேலை நாட்களை 4 நாட்களாக குறைக்க புதிய பொருளாதார கொள்கை வழிகாட்டுதல் பரிந்துரை செய்துள்ளது.
ஜப்பான்:
உலகின் கடுமையான உழைப்பிற்கு பெயர் பெற்ற நாடுகளில் ஜப்பான் நாடும் ஒன்று. அந்த நாட்டில் உள்ள ஊழியர்கள் அனைவரும் மிக தீவிரமாக தங்கள் பணிகளில் ஈடுபட்டு வருவர். அந்த நாட்டில் பெரும்பாலும் ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தில் 5 அல்லது 6 நாட்களில் பணி புரிந்து வருவார்கள். இந்நிலையில் புதிய பொருளாதார கொள்கை வழிகாட்டுதல் படி ஜப்பான் நாட்டில் இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணி புரிந்தால் போதுமானது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் ரூ.3000 உதவித்தொகை – அரசுக்கு கோரிக்கை!
சிறந்த ஒர்க் லைஃப் பேலன்சிற்கு இந்த வேலை நாட்கள் குறைப்புக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்கள் தங்கள் அலுவலக வாழ்க்கையில் இருந்து வெளியேறி, அவர்கள் நிதானமான செயல்களில் ஈடுபட ஊக்குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை நடைமுறைக்கு வந்தால் அது நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த வழிகாட்டுதல்களை நாட்டின் பிரதமர் யோஷி கைட் அவர்கள் கடந்த வாரம் இறுதி செய்தார்.
இந்த முறை நடைமுறைக்கு வந்தால் குடும்ப பராமரிப்பு பொறுப்பு உள்ளவர்கள் மற்றும் பணிபுரிந்து கொண்டே கல்வி பயிலும் விருப்பமுள்ளவர்கள் தங்கள் பணியில் இருந்து வெளியேறுவதை தடுக்க இயலும் என்று கூறப்படுகிறது. மேலும் மக்கள் பொருளாதாரத்திற்காக பகுதி நேர வேலை பார்க்கவும் இந்த முறை உதவும். ஜப்பானில் அதிக நேரங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும்பாலும் நோயினால் பாதிக்கப்பட்டு தங்கள் உயிரை இழந்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்த முறை அமலுக்கு வந்தால் மக்களின் உயிர் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வேலை நாட்கள் குறைக்கப்பட்டால் ஊழியர்களின் ஊதியத்தை குறைக்கும் நிலை ஏற்படும் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒருவேளை புதிய வேலை வார கொள்கையை தேர்வு செய்யும் ஊழியர்களுக்கு நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் மீது அக்கறை இல்லை என்கிற குற்றச்சாட்டுகளும் எழுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.