TNPSC குரூப் 2, 4 VAO தேர்வர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – புதிய பாடத்திட்டம் வெளியீடு!
TNPSC மூலம் நடத்தப்படும் குரூப் 2, குரூப் 4 VAO போட்டி தேர்வுகள் புதிய பாடத்திட்டம் அடிப்படையில்தான் நடைபெறும், மேலும் இந்த புதிய பாடத்திட்டம் மற்றும் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டம் :
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை போட்டி தேர்வுகள் நடத்தி தகுதியானவர்களை தேர்தெடுத்து நிரப்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி தேர்வுகள் குரூப் 1, குருப் 2, குரூப்2A, குரூப் 4 என்ற வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தேர்வுகள் வருடம்தோறும் நடைபெற்று வருகின்றன, இருப்பினும் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு எந்த ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பும் அறிவிக்கப்படாமல் இருந்தது.
பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – பிப்ரவரி 25 கடைசி நாள்! உடனே விரையுங்கள்!
இந்த வகையில் TNPSC யும் போட்டி தேர்வுகளை நடத்தாமல் நிறுத்தி வைத்திருந்தது. இருப்பினும் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் நடப்பு ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக ஆங்கிலப்பாடம் நீக்கப்பட்டு தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மொழித்தாளில் வெற்றி பெற்றால் மட்டுமே மற்ற தாள்கள் திருத்தப்படும் என்று உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
இந்த உத்தரவு அடிப்படையில் தமிழ் மொழி தாளில் கட்டாயம் 40% மதிப்பெண்கள் பெற வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் TNPSC தேர்வுகள் பழைய பாடத்திட்டம் மூலம் நடைபெறுமா? அல்லது புதிய பாட திட்டம் மூலம் நடைபெறுமா? என்று கேள்வி தேர்வர்களிடம் எழுந்து வந்தது. இந்த கேள்வி அடிப்படையில் TNPSC தேர்வுகள் புதிய பாடத்திட்டம் அடிப்படையில்தான் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.TNPSC குரூப் 2 திருத்தப்பட்ட திருத்தப்பட்ட பாடத்திட்டம் https://www.tnpsc.gov.in/