பிப்ரவரி 28 வரை பள்ளிகளை சுற்றி நடக்க கட்டுப்பாடுகள் விதிப்பு – காவல்துறை நடவடிக்கை! ஹிஜாப் சர்ச்சை!

0
பிப்ரவரி 28 வரை பள்ளிகளை சுற்றி நடக்க கட்டுப்பாடுகள் விதிப்பு - காவல்துறை நடவடிக்கை! ஹிஜாப் சர்ச்சை!
பிப்ரவரி 28 வரை பள்ளிகளை சுற்றி நடக்க கட்டுப்பாடுகள் விதிப்பு - காவல்துறை நடவடிக்கை! ஹிஜாப் சர்ச்சை!
பிப்ரவரி 28 வரை பள்ளிகளை சுற்றி நடக்க கட்டுப்பாடுகள் விதிப்பு – காவல்துறை நடவடிக்கை! ஹிஜாப் சர்ச்சை!

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கிற்கு இறுதி முடிவு கிடைக்கும் வரைக்கும், அடுத்த 2 வாரங்களுக்கு அத்தியாவசியமற்ற விதத்தில் பள்ளி வளாகங்களை சுற்றி பொது மக்கள் கூடுவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.

கட்டுப்பாடுகள் அமல்

கடந்த வாரத்தில் முழு இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த கர்நாடகாவின் ஹிஜாப் சர்ச்சை தற்போது மெது மெதுவாக ஓய்ந்து வருகிறது. அதாவது, கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் பயிலும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததால் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாததை முன்னிட்டு பல்வேறு பிரச்சனைகள் உருவானது. இந்த பிரச்சனையானது, காலப்போக்கில் போராட்டமாக உருவெடுத்து கர்நாடகாவில் மிகப்பெரிய கலவரம் உருவானது.

WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய வசதி விரைவில் அறிமுகம்!

இந்த பிரச்சனைக்கு மத்தியில் மாநிலம் முழுவதும் கடந்த 9ம் தேதி முதல் மூடப்பட்ட பள்ளிகள், பிப்ரவரி 14 முதல் மீண்டுமாக திறக்கப்பட்டது. இந்நிலையில் மாநில அரசின் உத்தரவையடுத்து, கல்வி நிறுவனங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், பொது மக்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கல்வி நிறுவனங்களை சுற்றி நடப்பதற்கு நகர போலீஸ் கமிஷனர் சந்திரகுப்தா தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு பிப்ரவரி 28ம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு ஊரடங்கு அமல் / நீக்கப்பட்டுள்ள மாநிலங்களின் விவரம் – முழு பட்டியல் இதோ!

அந்த வகையில் பிப்ரவரி 14 முதல் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் மீண்டும் தொடங்கி இருக்கும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர எந்தவொரு சட்டவிரோதமான கூட்டம் மற்றும் போராட்டம் நடத்துவது, பள்ளிகளை சுற்றி ஊர்வலம் நடத்துவது போன்ற செயல்பாடுகளும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகா காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!