தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகள் – ‘இது’ கட்டாயம்!
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்கள் வாங்க முடியும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. அதன் பின்னர் அரசின் துரித நடவடிக்கை காரணமாக கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளது. இந்நிலையில், கொரோனாவை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே ஒரே வழியாக இருந்தது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதால் சில மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு மட்டுமே சில சலுகைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ்? உத்தரவு வாபஸ்!
முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் இன்று முதல் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தடுப்பூசி அவசியம் செலுத்தியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் படி தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்றும், அதனால் கட்டாயம் அனைவரும் ரேஷன் கடைக்கு பொருட்களை வாங்க வரும்போது தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளின் முன்பும் ஒட்டப்பட்டுள்ளது.
Jioவின் ரூ.75 மலிவு விலை ரீசார்ஜ் திட்டம் – புதிய அறிமுகம்!
இதற்கு காரணம் ரேஷன் கடைகளில் தினந்தோறும் நூற்றுக்கு மேற்பட்டோர் கடைகளில் கூடுவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் சரக்குகள் வழங்கப்படும் என்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.