தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – புதிய கட்டுப்பாடுகள் அமல்!

0
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - புதிய கட்டுப்பாடுகள் அமல்!
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - புதிய கட்டுப்பாடுகள் அமல்!
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – புதிய கட்டுப்பாடுகள் அமல்!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. அதனால் தடுப்பு பணியாக உயர்நீதிமன்றங்களில் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.

கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இதனால் மக்களும் இயல்பு நிலை நோக்கி திரும்பி வந்த நிலையில் தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸின் தாக்கத்தால் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 600-ஐ தாண்டி உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது நான்காம் அலையின் தாக்குதலாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அதனால் தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. அந்த வகையில் தற்போது சென்னை, மதுரை உயர் நீதிமன்றங்களில் கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பாதுகாப்பான தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வழக்கு தொடுப்பவர்கள் அவசியமின்றி நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஜூன் 26ம் தேதி வரை நீட்டிப்பு – அரசு திடீர் உத்தரவு!

மேலும் பணி தொடர்பாக நீதிமன்றத்தில் நுழைபவர்களை கட்டாயம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். அவர்கள் கிருமி நாசினிகளை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் கூட்டம் அதிகம் கூடுவதை தவிர்க்கவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேற்சொன்ன கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க தேவையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!