நாமக்கல் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஏற்கனவே திருப்பூர், கோவை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டு உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனை சரி செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக கொரோனா பரவல் கணிசமாக குறைந்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
FD கணக்கில் 7.25% வரை வட்டி தரும் வங்கிகள் – முழு விவரம் இதோ!
இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய், காவல் மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறுகையில், கொரோனா மூன்றாம் அலை தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் மாவட்டம் முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி,
- அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மக்கள் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பால், மருந்தகம் தவிர மளிகை, காய்கறி, பேக்கரி உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும், காலை, 6:00 முதல், மாலை, 5:00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
- உணவகங்களில், 50 சதவீத வாடிக்கையாளர் மட்டுமே உணவருந்த அனுமதிக்கப்படுகிறது. மாலை, 5:00 முதல், இரவு, 10:00 வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- தேநீர் கடைகள், காலை, 6:00 முதல், மாலை, 5:00 மணி வரை அமர்ந்து தேநீர் அருந்தவும், மாலை, 5:00 முதல், இரவு, 10:00 மணி வரை, பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
- நாமக்கல், ராசிபுரம் நகராட்சி பகுதிகளில், குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மீன், மட்டன், கோழி இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- பூங்கா, கொல்லிமலை உட்பட அனைத்து சுற்றுலா தலங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை மக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மற்ற நாட்களில் கொல்லிமலை செல்ல, 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை சான்றிதழ் (நெகட்டிவ் சர்டிபிகேட்) அல்லது கொரோனா தடுப்பூசி இரண்டு தவணை செலுத்தப்பட்டதற்கான சான்று அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் மக்கள், அவசர தேவைக்கு செல்வோரை தவிர மற்ற அனைவரும் கொல்லிமலை செல்ல, காலை, 6:00 முதல், மாலை, 6:00 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.