தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் பின்பற்றினாலும் கூட கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், அலுவலகங்களில் ஊழியர்கள் முழு நேரமும் மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் இரட்டிப்பாகி கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
Exams Daily Mobile App Download
ஏற்கனவே, பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் எனவும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக சுகாதாரத்துறை எச்சரித்திருந்தது. இருப்பினும் கொரோனா தொற்று அதிகரித்தபடியே இருப்பதால் கூடிய விரைவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என மக்கள் பீதியில் உள்ளனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 20 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1,400 ஆக அதிகரித்துள்ளது.
ரூ.32,000 ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்..!
அதாவது, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பொது இடங்களில் கடைபிடித்தாலே ஓரளவுக்கு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், பெரும்பாலும் மக்கள் பொது இடங்களில் மற்றும் அலுவலகங்களில் இந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. பொது இடங்கள் மற்றும் அலுவலகங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் சரியாக பின்பற்றுகிறார்களா என்பதனை மாவட்ட ஆட்சியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும், அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் முழுநேரமும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.