இன்று முதல் 3 மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்துள்ளதையடுத்து ஆந்திரா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் குறிப்பிட்ட வகுப்புகளுக்காக மட்டும் பள்ளிகள் இன்று (ஆகஸ்ட் 16) முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன. இதனுடன், புதிய வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
கடந்த 2 மாநிலங்களுக்கும் மேலாக கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பள்ளிகள் வெவ்வேறு வகுப்புகளுக்காக இன்று (ஆகஸ்ட் 16) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஆந்திரா, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை துவங்க முடிவு செய்துள்ளன. இதற்கிடையில், தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளும் இன்று (ஆகஸ்ட் 16) முதல் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பள்ளி வளாகங்கள் அரசு வெளியிட்டுள்ள சில வழிகாட்டுதல்கள் நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு – புதுச்சேரி அரசு அறிவிப்பு!
ஆந்திரப் பிரதேச அரசு இடைநிலை அல்லது 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் இன்று (ஆகஸ்ட் 16) முதல் பள்ளிகளை திறந்துள்ளது. இதில் மாணவர்கள் வருகை என்பது கட்டாயமாக்கப்படவில்லை. அதே நேரத்தில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பாத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், அம்மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கை, NEP 2020 ஐ செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. NEP 2020 இன் கீழ் 6 வகையான பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேச மாநிலத்தை பொருத்தளவு, இன்று முதல் உயர் மற்றும் இடைநிலை வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளது. இது தொடர்பான அரசாங்க உத்தரவின்படி, மாணவர்கள் 50% திறனுடன் பள்ளிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதனுடன், ஜூனியர் உயர்நிலைப் பள்ளிக்கான சேர்க்கை இன்று முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் இன்று (ஆகஸ்ட் 16) முதல் 1 லிருந்து 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் மீண்டும் துவங்கியுள்ளன. இதற்காக பாட்னா மாவட்ட கல்வி நிர்வாகத்தால் பள்ளி பேருந்துகள் மற்றும் வளாகங்களுக்கு சிறப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதற்கிடையில், தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளும் இன்று (ஆகஸ்ட் 16) முதல் நேரடி முறையில் வகுப்புகளை மீண்டும் தொடங்க ஒப்புதல் பெற்றுள்ளன. அதன் படி மாணவர்கள் கல்லூரி வளாகத்தின் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்கவும், முகக்கவசம் அணிவது, சானிடைசரைப் பயன்படுத்துதல் போன்ற அனைத்து கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
😡😡y😡😡😡