தமிழகத்தில் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் – மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்!
தமிழகத்தில் சில வாரங்களாக தான் கொரோனா தொற்று குறைவாக இருந்தது. தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுக்க துவங்கியுள்ளதால் பொது மக்களை கண்டிப்பாக மாஸ்க் அணியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதமும் வசூலிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வந்தது. கொரோனாவை கட்டுப்படுத்தஅரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருப்பினும் ஒவ்வொரு நாளும் கொரோனாவின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் சென்றது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால், அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு செல்லும்படியும், அப்படி வெளியே செல்ல நேரிடும் சமயத்தில் மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு தரப்பில் இருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் மூடல் – தனியார் கல்வி நிறுவனங்கள் அறிவிப்பு!
இதுமட்டுமல்லாமல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அரசு விதித்திருந்த இந்த கட்டுப்பாடுகளை மக்கள் ஓரளவுக்கு பின்பற்றியதால் தான் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது. இதனால் மக்கள் சுதந்திரமாக தெருக்களில் நடமாட துவங்கினர். இந்த சமயத்தில் சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்தது. தலைநகரான டெல்லி, உத்தரபிரதேசம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாகவே தமிழகத்தில் மக்கள் மாஸ்க் அணிய தேவையில்லை எனவும், விருப்பத்தின் பெயரில் மக்கள் மாஸ்க் அணிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் கண்டிப்பாக பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது