மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி – டாஸ்மாக் விற்பனை பாதிப்பு!
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் 12 டாஸ்மாக் கடைகள் வார இறுதி தினங்களில் அடைக்கப்பட்டு வருகிறது.
டாஸ்மாக் கடைகள் :
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து இரு முகத்தில் இருந்து வருகிறது. தொற்று பாதிப்பை குறைக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க முக்கிய வீதிகளில் செய்யப்படும் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளை தொடர்ந்து விரைவாக தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறை மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. பொது இடங்களில் மக்கள் அரசின் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
NEET 2021 தேர்வு ஒத்திவைப்பு? மாணவர்கள் எதிர்பார்ப்பு!
டாஸ்மாக் கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மது பிரியர்கள் தொற்று அதிகரிக்கும் இந்த நேரத்தில் அச்சமின்றி சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூடுவதால் கொரோனா மேலும் பரவ வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் டாஸ்மாக் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோட்டில் கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே பார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து 105 பார்கள் அடைக்கப்பட்டுள்ளன. ஈரோட்டில் வழக்கமாக 4 கோடி வரை டாஸ்மாக் கடைகளில் விற்பனையாகும்.தற்போது விதிக்கப்பட்டுள்ள நேர கட்டுப்பட்டால் இதனால் மது விற்பனை விகிதம் குறைந்துள்ளது என்று உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும் அம்மாவட்டத்தில் உள்ள 24 இடங்களில் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.