தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – கொரோனா பரவல் எதிரொலி!

0
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் - கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் - கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – கொரோனா பரவல் எதிரொலி!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அதை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எதுத்து வருகிறது. அந்த வகையில் பள்ளி வளாகங்களில் கொரோனா விதிமுறைகளை மாணவர்கள் உட்பட அனைவரும் 100 விழுக்காடு அளவிற்கு கடைப்பிடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

புதிய கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில், கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இதனால், கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை அடுத்து, பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில், பல மாதங்களுக்கு பிறகு, கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை இன்று 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில், 2,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதில் சென்னையில் மட்டும், 909 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும் 11 ஆயிரத்து 94 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு , பள்ளி வளாகங்களில் கொரோனா விதிமுறைகளை 100 விழுக்காடு அளவிற்கு கடைப்பிடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அவர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதன்படி,

அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

  • பள்ளி வளாகங்களில் மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்.
  • மாணவர்கள் அனைவரும் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.
  • அதிகமான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் கொரோனா பரவ வாய்ப்பு இருக்கிறது. அதனால் பள்ளிகளுக்கு வரும் பணியாளர்கள், மாணவர்கள் உட்பட அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.

  • உடல் வெப்பம் அதிகமாக இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
  • தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
  • வகுப்பறையில் நல்ல காற்றோட்டமான சூழல் நிலவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!