ஏர் இந்தியா விமானங்களில் பயணிகளுக்கு புது கட்டுப்பாடு – முழு விவரம் இதோ!
கடந்த நவம்பர் மாதம் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி மீது நபர் ஒருவர் சிறுநீர் கழித்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போது ஏர் இந்தியா விமானங்களில் மதுபானம் அருந்துவதில் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு கட்டுப்பாடு:
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி, முதல் வகுப்பு பயணி ஒருவர் மது போதையில் பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்தார். அதன் பின் அந்த பெண் பயணி டெல்லி போலீசிடம் இது குறித்து வழக்கு தொடர்ந்தார். இதே போல பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்திலும் பயணி ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. அதனால் ஏர் இந்தியாவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் வங்கி லாக்கர் வசதியை பயன்படுத்துபவரா? உங்களுக்கான முக்கிய அப்டேட்!! RBI வெளியீடு!
Follow our Instagram for more Latest Updates
அதன் படி ஏர் இந்தியா விமானங்களில் மதுபானம் அருந்துவதில் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் விருப்பப்பட்ட மதுபானங்களை அருந்த கூடாது எனவும், பணிப்பெண்கள் கொடுக்கும் மதுபானங்களை மட்டுமே அருந்த வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இது போல சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.