திருப்பதி செல்லும் பக்தர்களுக்காக புதிய கட்டுப்பாடுகள் – தேவஸ்தானம் அறிவிப்பு!
திருப்பதியில் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், டி.ஆர்.டி.ஓ., உதவியுடன் கோவையில் இருந்து தட்டு மற்றும் குவளைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
புதிய திட்டம்:
உலகம் முழுவதும் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால், லட்டு போன்ற பிரசாத பொருட்களை வழங்குவதற்காக சுற்றுச்சூழலுக்கு உகந்த தட்டு மற்றும் குவளைகள் மூலமாக கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், டி.ஆர்.டி.ஓ., உதவியுடன் கோவையில் இதற்கான தட்டு மற்றும் குவளைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
Exams Daily Mobile App Download
மேலும், திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் லட்டு போன்ற பிரசாதங்களை எடுத்து செல்ல பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மூலமாக ஆர்.டி.ஓ., உதவியுடன் மட்கும் தன்மை கொண்ட பைகள், சணல் பைகள் அனைத்தும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதாவது, மேக் இந்தியா நிறுவனம் டி.ஆர்.டி.ஓ நிறுவனத்துடன் இணைந்து காய்ந்த பருத்திச் செடி, துவரை செடி, தேங்காய்மட்டை, தென்னை மட்டை, மரத்துாள் ஆகிய வேளாண் கழிவுகளில் இருந்து இந்த தட்டு மற்றும் குவளைகளை உருவாக்குகின்றனர்.
ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு இனி கவலை வேண்டாம் – புதிய அப்டேட்! மத்திய அரசு ஏற்பாடு
இந்த தட்டு மற்றும் குவளையை பக்தர்கள் திரும்ப திரும்ப பயன்படுத்த முடியும். மேலும், இந்த பொருட்களில் ரசாயன பொருட்கள் எதுவுமே சேர்க்கப்படவில்லை. தட்டு மற்றும் குவளையை தொடர்ந்து அனைத்து வடிவங்களிலும் பொருட்களை தயாரிக்க உரிமம் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலை அடுத்து முக்கிய தமிழக கோவில்கள், சுற்றுலாத்தலங்கள் என அனைத்து பகுதிகளிலும் இந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என மேக் இந்தியா நிறுவன தலைவர் அறிவித்துள்ளார்.