தமிழகத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா – போக்குவரத்துத்துறைக்கு முக்கிய எச்சரிக்கை!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் அரசு பேருந்துகளில் நடத்துனர்களுக்கு போக்குவரத்து துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதனை கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய உத்தரவு:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரு நாள் பாதிப்பு தற்போது 2000 ஐ தாண்டியுள்ளது. சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுப்பதால் இது நான்காம் அலை பாதிப்புகள் என்று கூறப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,672- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் கொரோனாவால் 1072 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் செங்கல்பட்டில் 373 பேருக்கும், கோவையில் 145 பேருக்கும், திருவள்ளூரில் 131 பேரும் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
PG TRB ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு – பதிவிறக்கம் செய்யும் முறைகள்!
மேலும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 14,504 ஆகவும் உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து 1,487 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட நிர்வாகங்கள் தொற்று பரவல் நிலையை பொறுத்து தேவைக்கேற்ப கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தற்போது உருமாற்றம் அடைந்த வைரஸ் அதிக வீரியத்துடன் வேகமாகவும் பரவும் தன்மை கொண்டது என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அவரை சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
எனவே பொதுமக்கள் அரசின் நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும். மீண்டும் ஒரு ஊரடங்கு அறிவிக்கும் நிலைக்கு அரசை தள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தடுப்பு பணியின் ஒரு பகுதியாக அரசு பேருந்துகளில் எச்சில் தொட்டு பயணிகளுக்கு நடத்துனர்கள் டிக்கெட் தரக்கூடாது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பெரும்பாலும் அரசு பேருந்துகளில் நடத்துனர்கள் எச்சில் தொட்டு பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதாக புகார்கள் எழுந்தது. இதனால் எச்சில் தொட்டு டிக்கெட் வழங்குவது மூலமாக கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது. இதனை தடுக்க எச்சில் தொட்டு பயணிகளுக்கு நடத்துனர்கள் டிக்கெட் தரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.