TN TRB ஆசிரியர் தகுதித்தேர்வு 2022 – கொள்கை முடிவு எடுக்க கோரிக்கை முன்வைப்பு!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை சிபிஐ மாநிலச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார். இதுவரை தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆசிரியர் தகுதித்தேர்வு:
தமிழகத்தில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. அதனால் 2 வருடங்களாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறவில்லை. இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கற்றல், கற்பித்தலில் இடையூறு ஏற்பட்டது. அதனால் உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அடுத்த கேப்டன் பாஃப் டு பிளெசிஸ்? ரவி சாஸ்திரி கருத்து!
இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 13ம் தேதி பட்டதாரி மற்றும், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. முதல் தாள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள் ( (D.T.Ed) இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்கள் B.ED முடித்தவர்கள் தேர்வை எழுதலாம். முதல் மற்றும் இரண்டாம் தாளில் 150 வினாக்கள் இடம்பெறும். குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
தற்போது இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவுகள் நடைபெற்று வருகிறது. விண்ணப்பிக்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும் 2011 ஆம் ஆண்டுக்கு முன் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பணியில் தொடர அரசாணை வெளியிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.