ஜூன் 21 முதல் புதிய தளர்வுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
கர்நாடக மாநில அரசு புதிய தளர்வாக கிளப்களில் மது விற்பனை செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மதுபான விற்பனைகள் 50 சதவிகித ஊழியர்களுடன் நடைபெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜூன் 21 முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு தளர்வுகள்:
கர்நாடக மாநிலத்தில் தற்போது தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஜூன் 15ம் தேதி மாநில முதல்வர் எடியூரப்பா அவர்கள் கூறியதாவது, 21ம் தேதி முதல் புதிய தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவித்து இருந்தார்.
தமிழகத்தில் மூன்று மணி நேர மின்வெட்டு – மின்சாரத்துறை அமைச்சர் தகவல்!!
கர்நாடகா மாநிலத்தில் கிளப்களில் 50 சதவிகித பணியாளர்களுடன் மது விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிளப்களில் மது விற்பனை மட்டுமே செய்யப்பட வேண்டும் என்றும் வேறு எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து முதன்மை கணக்காளர் அலுவலகம் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கடந்த 14ம் தேதி முதல் மாநில அரசு கடும் கட்டுப்பாடுகளுடன் பாதிப்பு அதிகமாக காணப்படும் 11 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாட்டை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. மீதமுள்ள மாவட்டங்களுக்கு மட்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாநிலத்தில் இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு மற்றும் வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரையிலான வார இறுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.