ஜூன் 10ம் தேதிக்கு பின்னர் புதிய தளர்வுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!!

0
ஜூன் 10ம் தேதிக்கு பின்னர் புதிய தளர்வுகள் அமல் - மாநில அரசு அறிவிப்பு!!
ஜூன் 10ம் தேதிக்கு பின்னர் புதிய தளர்வுகள் அமல் - மாநில அரசு அறிவிப்பு!!
ஜூன் 10ம் தேதிக்கு பின்னர் புதிய தளர்வுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட நிலையில் ஜூன் 10 முதல் சில தளர்வுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்:

மத்திய பிரதேசம் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வந்த காரணத்தால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி மாநில அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. அவை அனைத்தும் ஜூன் 10 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு – உயர்நீதிமன்றம் கருத்து!

அதன்படி ஜூன் 10 முதல் இரவு ஊரடங்கு 8 மணி முதல் காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும், சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து கடை ஊழியர்களும் தங்கள் வணிக நிறுவனங்களைத் திறப்பதற்கு முன் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மருத்துவக் கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் தலைமையிலான நிர்வாகம் வர்த்தகர்கள் சங்கத்துடன் பேசிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காய்கறி சந்தைகள் புதன்கிழமைகளில் திறந்திருக்கும் எனவும் தடுப்பூசி போடப்பட்ட பகுதிகளில் மட்டுமே திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் இதுவரை 7.85 லட்சம் பேருக்கு கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!