இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு நீக்கம் – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு நீக்கம் - புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு நீக்கம் - புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு நீக்கம் – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

அசாம் மாநிலத்தில் தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 1,000 க்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டு வருவதால் இன்று (ஆகஸ்ட் 3) காலை முதல் முழு ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு நீக்கம்

நாடு முழுவதும் கொரோனா 2 ம் அலை தாக்கம் குறைந்து வருவதை அடுத்து அசாம் மாநிலத்தில் இன்று (ஆகஸ்ட் 3) அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு உத்தரவு இருக்காது என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், கோலாகாட் மற்றும் லக்கிம்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் கொரோனா நேர்மறை விகிதம் சற்றே அதிகமாக இருப்பதால், இந்த இரண்டு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப் 27 முதல் ‘இந்த’ மொபைல்களில் கூகுள் சேவைகள் நிறுத்தம் – ஷாக் ரிப்போர்ட்!

மேற்குறிப்பிட்ட இரண்டு மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்படும் என்று அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பணியிடங்கள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள், ரிசார்ட்ஸ், தாபாக்கள் மற்றும் பிற உணவகங்களில் அமர்ந்து உணவருந்தவும், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும் மதியம் 1 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தவிர கோலாகாட் மற்றும் லக்கிம்பூர் மாவட்டங்களில் பிற்பகல் 4 மணி வரையிலும் இவ்வகை செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகிறது. மேலும் விற்பனை கவுண்டர்கள், ஷோரூம்கள், குளிர்பான கிடங்குகள் மதியம் 1 மணி வரை திறந்திருக்கும். இவை அனைத்தும் மற்ற மாவட்டங்கள் மாலை 4 மணி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மளிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பால் கடைகள், கால்நடை தீவன கடைகள் அனைத்தும் கோலாகாட் மற்றும் லக்கிம்பூர் மாவட்டங்களில் மாலை 5 மணி வரையும் மற்றும் பிற மாவட்டங்களில் மாலை 4 மணி வரையிலும் திறந்திருக்கும்.

TN Job “FB  Group” Join Now

அனைத்து மாவட்டங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படும். இருப்பினும், பொருட்களின் இயக்கம் தொடரும். பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். திருமண விழா அல்லது இறுதிச் சடங்கில் அதிகபட்சமாக 10 பேர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாவட்டங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து, கல்வி நிறுவனங்கள், மத இடங்கள் மற்றும் அரசு நினைவுச்சின்னங்கள் போன்றவற்றைத் திறப்பது குறித்து ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு பிறகு பரிசீலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!