முழு ஊரடங்கு உத்தரவில் புதிய தளர்வுகள் அமல் – நகர நிர்வாகம் முடிவு!
இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களால் உருவான வன்முறைக்கு மத்தியில் இப்போது ஓரளவு அமைதியான சூழ்நிலை நிலவியதால் தோடா மாவட்டத்தின் பதேர்வா நகரில் காலை 9 மணி முதல் மூன்று மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.
ஊரடங்கு தளர்வு
சமீபத்தில் நபிகள் நாயகம் குறித்த சில தவறான கருத்துக்களை தெரிவித்த பிஜேபியின் செய்தி தொடர்பாளர்கள் நுபு சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரை கைது செய்யக்கோரி நடத்தப்பட்ட போராட்டம் காரணமாக தோடா மாவட்டத்தின் பதேர்வா நகரில் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இப்போது, தோடா மற்றும் கிஷ்த்வார் உள்ளிட்ட மாவட்டங்களில் கிட்டத்தட்ட எட்டாவது நாளாக அமலில் இருக்கும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பதேர்வாவில் இன்று 3 மணி நேரத்திற்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இப்போது ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள பதேர்வா உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள மக்கள் மத நல்லிணக்கத்தை பேணுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு தொடர்புடைய அனைத்து கட்டுப்பாடுகளும் விரைவில் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஜம்முவில் வகுப்புவாத வன்முறை வெடிப்புக்கு பிறகு கடந்த வாரம் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நேற்று (ஜூன் 16) 2 மணிநேரம் வரை தளர்த்தப்பட்டது.
ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு – விரைவில் கார்டு ரத்து செய்யப்படுமா? ஆணையர் விளக்கம்!
இதை தொடர்ந்து இன்று (ஜூன் 17) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஊரடங்கு சட்டம் சுமார் 3 மணிநேரத்திற்கு தளர்த்தப்பட்டுள்ளதால் வியாபாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இதற்கிடையில் ‘தோடா, தத்ரி மற்றும் கந்தோ நகரங்களில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டோம். இங்குள்ள மக்கள் முறையாக நடந்து கொண்டால் மீதமுள்ள கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும்’ என்று DC தோடா விகாஸ் சர்மா குறிப்பிட்டுள்ளார். மேலும், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் குறிப்பிட்ட சில பகுதிகளில் இப்போது இணைய வசதிகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.