ஜூன் 14ம் தேதி முதல் ஊரடங்கில் புதிய தளர்வுகள் – மாநில அரசு முடிவு!!
கர்நாடக மாநிலத்தில் வருகிற 14ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் சூழலில் வருகிற நாட்களில் அரசு சார்பில் பல தளர்வுகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு தளர்வுகள்:
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய்த்தொற்றின் வீரியம் குறைந்து வருகிறது, அதன்படி நேற்று அங்கு புதிதாக 10,959 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் தொற்றால் 2,395 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே விரைவில் அங்கு கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவிகிதத்திற்கு குறைவாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அங்கு வருகிற ஜூன் மாதம் 14ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வர உள்ளது.
பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடம் – சிறந்த ஆராய்ச்சி பல்கலை தரவரிசை பட்டியல்!!
இந்நிலையில் வருகிற நாட்களில் கர்நாடக மாநிலத்தில் தளர்வுகள் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து பேசிய மாநில வருவாய் துறை அமைச்சர் அசோகா அவர்கள் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் 4 முதல் 5 கட்ட தளர்வுகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதன்படி ஏற்கனவே காலை 6 மணி முதல் 10 மணி வரை மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இதன் நேர கட்டுப்பாடு பிற்பகல் 3 மணி வரை அதிகரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் காலை நேரத்தில் நடைபயணம் மேற்கொள்பவர்கள் பூங்காவிற்கு செல்ல அனுமதி வழங்கப்படும். வீட்டில் இருந்து பணிபுரியும் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் அவர்கள் கூறியதாவது, தளர்வுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டால் பாதிப்பு அதிகரிக்கும். எனவே படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் இதுகுறித்து முதல்வர் எடியூரப்பா அவர்கள் முடிவெடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
மேலும் புதிய தளர்வில் இரவு 8 மணி வரை ஆட்டோ மற்றும் கேப் இயங்க அனுமதி வழங்கப்படும் என்றும் தனியார் நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கி அனுமதி வழங்கப்படும் என்றும் சினிமா, மால்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் போன்றவற்றிற்கு தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.