தமிழக தனியார் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் – அமைச்சர் விளக்கம்!

0
தமிழக தனியார் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் - அமைச்சர் விளக்கம்!
தமிழக தனியார் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் - அமைச்சர் விளக்கம்!
தமிழக தனியார் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் – அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் அடுத்தடுத்து தனியார் பள்ளிகளில் நடைபெறும் மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய விளக்கம் ஒன்றை தெரிவித்துள்ளார். மேலும் தனியார் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பள்ளிகள்:

தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. மேலும் மாணவியின் மரணம் குறித்து பல்வேறு தரப்பில் இருந்து போராட்டங்களும், கலவரங்களும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து தனியார் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை இது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மேலும் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் நடந்து கொள்ளும் முறைகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் தான் அதிகமாக தற்கொலையில் ஈடுபடுகின்றனர். தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு அதிகமான மன அழுத்தத்தை அளிப்பதால் மாணவர்கள் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்பது போன்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இது குறித்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் நடந்து கொள்ளும் விதிமுறைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

TNUSRB PC தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – நாளை (ஆக.6) மாதிரி தேர்வு

அதாவது, மாணவர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். உடற்கல்வி நேரத்தை தவிர்க்காமல் விளையாட அனுமதிக்கப்படுகிறார்களா என்று கண்காணிக்க வேண்டும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உருவாகும் வகையில் ஊக்குவிக்கும் பேச்சாளர்களை மாணவர்கள் முன் பேச வைக்க வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் சென்னை மாநகராட்சியை ஒட்டியுள்ள பள்ளிகளை மாநகராட்சி பள்ளிகளுடன் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தனியார் பள்ளி மாணவர்கள் தான் அதிகமாக தற்கொலையில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார். தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் பெற அழுத்தம் தரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி பள்ளி மாணவர்களிடம் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் நேரில் சென்று பேசி கலந்தாலோசிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!