மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு புதிய கட்டுப்பாடு – டெல்டா பரவல் எதிரொலி!
நாடு முழுவதும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பாதிப்பானது சற்று உயர்ந்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பேருந்து போக்குவரத்து
இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலையின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் சூழலில் மாநிலங்கள் தோறும் முழு ஊரடங்கில் இருந்து புதிய தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் புதிதாக உருமாறிய கொரோனா டெல்டா பிளஸ் வகை பொது மக்களிடையே மீண்டுமாக அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்த நோய் பரவலின் தாக்கமானது மற்ற வைரஸ் வகையை காட்டிலும் தீவிரமாக பரவக்கூடியதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வகை வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – வதந்தி குறித்து விளக்கம்!
இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய அலை உருவாகுமா என்றும் அதனால் முழு ஊரடங்கு விதிக்கப்படுமோ என்றும் பலரது மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளது. இதனிடையே டெல்டா பிளஸ் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் படி கேரளாவில் உள்ள சில மாவட்டங்களில் டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் விமானம், பேருந்து, ரயில், டாக்சி மற்றும் சொந்த வாகனங்களில் கர்நாடகா வருபவர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பாக RT-PCR கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதே நேரத்தில் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் எடுத்துக் கொண்டவர்களுக்கு மட்டும் கொரோனா சான்றிதழில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிற்கு அவசர வேலைக்காக செல்பவர்களது பரிசோதனை மாதிரிகள் எல்லைப் பகுதியில் சேகரிக்கப்பட்டு, அவர்களது தொலைபேசி எண், முகவரி உள்ளிட்ட தகவல்கள் பெறப்படும்.
TN Job “FB Group” Join Now
மேலும் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், அரசு வேலை நிமித்தமாக செல்பவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சான்றிதழ் கட்டாயமில்லை. இந்த அறிவிப்பை தொடர்ந்து கேரள எல்லையை ஒட்டியுள்ள தக்ஷின கன்னடா, குடகு, மைசூரு, சாம்ராஜ் நகர் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களைபரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கல்வி, வியாபாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக கர்நாடகாவிற்கு வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை RT-PCR பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.