Airtel வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய ரீசார்ஜ் திட்டம் அறிமுகம்!
ஏற்கனவே நாட்டின் சில பகுதிகளில் ரூ.49 க்கான ப்ரீபெய்ட் திட்டத்தை நிறுத்தியுள்ள ஏர்டெல் தொலைத்தொடர்பு நிறுவனம், வரும் ஜூலை 29 முதல் இந்த சேவைகளை மற்ற பகுதிகளிலும் அதிகாரப்பூர்வமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
ப்ரீபெய்ட் திட்டம்
இந்தியாவின் முன்னனி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வரும் ஏர்டெல் நிறுவனம், தனது ரூ.49 ப்ரீபெய்ட் திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் மிக குறைந்த, மலிவு விலையிலான ஒரு ரீசார்ஜ் திட்டம் என்றால் அது ரூ.49 க்கான ப்ரீபெய்ட் திட்டம் தான். இவ்வகை திட்டத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இது சற்றே அதிர்ச்சியளிக்க கூடியதாக இருந்தாலும், இதற்கு ஏற்றதொரு ரீசார்ஜ் திட்டத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியள்ளது.
Paytm நிறுவனத்தில் புதிதாக 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு – அதிகாரபூர்வ அறிக்கை!
அந்த வகையில் மலிவு விலையில் வழங்கப்படும் ரூ.49 என்ற திட்டத்திற்கு பதிலாக ரூ.79 என்ற விலையில் புதிய திட்டம் கொடுக்கப்பட உள்ளது. இது பழைய ரீசார்ஜ் திட்டத்தை விட ரூ.30 அதிகமாக இருப்பினும், கூடுதல் டேட்டாவுடன் சிறந்த அழைப்புகளையும் வழங்குகிறது. இத்திட்டத்தில் பயனரிடம் இருந்து நொடிக்கு 1 பைசா என்ற அளவில் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. தவிர 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம் 200MB டேட்டா நன்மைகளையும் வழங்குகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த ரூ.79 க்கான ரீசார்ஜ் திட்டம் விலையில் சற்று அதிகமாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் இந்த திட்டத்தை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது ஏர்டெல் நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க இவ்வகை ரீசார்ஜ் திட்டங்களில் விலை உயர்வை அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனம் கொடுத்துள்ள விளக்கத்தில், போர்ட்ஃபோலியோவில் மிகக் குறைந்த ARPU வாடிக்கையாளர்களை கொண்டிருக்க விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளது. மேலும் கட்டண உயர்வு மூலம் ARPU வளர்க்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.