புதிய ரேஷன் கார்டுகள் விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – இனி அஞ்சல் மூலமாக வழங்க முடிவு!
தமிழகத்தில் முன்னர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் பல நாட்களுக்கு பிறகு தான் உங்களுக்கு புதிய ரேஷன் கார்டு கிடைக்கும். இதற்கு தீர்வு காணும் பொருட்டு தற்போது புதிய ரேஷன் கார்டை அஞ்சல் மூலமாக வழங்க உள்ளதாக கூட்டுறவுத்துறை திட்டமிட்டுள்ளது.
ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மலிவான விலையில் வாங்க முடியும். அத்துடன் மத்திய அரசின் சார்பாக செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு மூலமாக செயல்படுத்தப்படுகிறது. அதனால் தற்போது புதிய ரேஷன் கார்டுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இதையடுத்து தற்போது புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமெனில் நிறைய முறை அலைய வேண்டியிருக்கும்.
Exams Daily Mobile App Download
அத்துடன் உங்களின் கைகளுக்கு வந்து சேர நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் பெரும்பாலானோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தயக்கம் காட்டுகின்றனர். இதையடுத்து தற்போது இதற்கு தீர்வு காணும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய ரேஷன் கார்டுகளை விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு சென்று அஞ்சல் மூலமாக கொடுக்க திட்டமிட்டுள்ளது. இதனை செயல்படுத்த உணவு வழங்கல் துறை அரசிடம் ஒப்புதல் கேட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – கல்வித்துறையின் உத்தரவு!
அதன்படி தற்போது இத்திட்டத்திற்கு அரசிடம் ஒப்புதலும் கிடைத்துள்ளது. இதையடுத்து நீங்கள் வீட்டில் இருந்தபடியே புதிய ரேஷன் கார்டை பெற வேண்டுமெனில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது உங்களின் விண்ணப்ப படிவத்தில் வீட்டுக்கு டெலிவரி செய்வதற்கான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அத்துடன் இதற்கு நீங்கள் நகல் கார்டுக்கு 20 ரூபாய் கட்டணமும் மற்றும் அஞ்சல் கட்டணத்திற்கு ரூ.25 என மொத்தமாக ரூ.45 கட்டணம் செலுத்த வேண்டும். இறுதியாக உங்களின் விவரங்கள் சரியானதாக உள்ளதா என்று அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு ரேஷன் கார்டு அச்சிடப்படும். அதன்பின்பு அஞ்சல் மூலமாக உங்களின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.