விண்ணப்பித்த 7 நாட்களில் ரேஷன் கார்டு – மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு!
சிவகங்கை மாவட்டத்தில் ஜமாபந்தி கூட்டம் நடைபெற்ற நிலையில், புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தவர்களுக்கு 7 நாட்களுக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ரேஷன் கார்டு:
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடந்தது. ஜமாபந்தி, என்பது ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை முறையாகும். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் இந்த முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொள்வர்.
வங்கிகளில் இருந்து 90 நாட்களில் ரூ.5 லட்சம் வரை பெறும் வசதி – மத்திய அரசு!
நேற்று நடந்த கூட்டத்தில் காரைக்குடி, மித்ராவயல் கிராம கணக்குகளை மாவட்ட ஆட்சியர் பி. மதுசூதன் ரெட்டி அவர்கள் ஆய்வு செய்தார். இந்த ஆய்வு கூட்டத்தில் வட்டாட்சியர் அந்தோணிராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த ஆய்விற்கு பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சிவகங்கை மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 7 நாட்களில் ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், முன்னதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 3,500 கார்டுகள் அச்சடித்து வந்துள்ளது. அவற்றில் சுமார் 1,600 பேர்களுக்கு அவை விநியோகம் செய்யப்பட்டு விட்டது. மீதம் உள்ளவர்களுக்கு இன்னும் இரண்டு நாட்களில் அட்டைகள் வழங்கப்படும். புதிதாக 2,000 கார்டுகள் அச்சடிக்கும் பணிகள் நடந்து வருகின்றது. புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 300 மனுக்கள் விசாரணையில் உள்ளது என்று அவர் தெரிவித்து உள்ளார்.