தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – விண்ணப்பிப்பது எப்படி?
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைன் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம். அதற்கான வழிமுறைகளை பற்றி இப்பதிவில் காண்போம்.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது பல வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தார். அதில் குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதிதாக திருமணம் ஆனவர்கள் அதிகமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆன்லைனில் கடன் வாங்க திட்டமிடுவோர் உஷார் – 600 ஆப்கள் போலி! ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
தற்போது உணவு வழங்கல் துறைக்கு சென்று ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க அவசியம் கிடையாது. வீட்டில் இருந்தே ஆன்லைன் வாயிலாக எளிதாக விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு கால தாமதமின்றி 15 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் விரைவில் உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைத்து விடும். குடும்பத்தின் வருவாயை பொறுத்து ரேஷன் கார்டு 5 வகைகளில் வழங்கப்படுகிறது. நீங்கள் அளிக்கும் விவரத்தை பொறுத்து ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் மின்னணு அட்டை என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்யவும். பெயர், மாவட்டம், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, இருப்பிட முகவரி ஆகியவற்றை உள்ளிடவும்.
- குடும்பத் தலைவர் புகைப்படம்’ என்ற இடத்தில் உங்களின் குடும்பத் தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். புகைப்படம் 5MB க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- குடும்ப அட்டையில் உறுப்பினர்களை சேர்க்க புதிய பக்கத்தை திறந்து குடும்பத் தலைவரின் பிறந்த தேதி, தொழில், மாத வருமானம், வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.
- குடும்ப தலைவரின் ஆதார் அட்டையை ஸ்கேன் செய்து ) பதிவேற்றம் வேண்டும்.
- அடுத்ததாக குடும்ப அட்டை தேர்வில் எந்த வகை ரேஷன் அட்டை வேண்டுமோ அதை தேர்வு செய்யவும்.
- நீங்கள் பதிவு செய்ததை சரிபார்த்து கடைசியாக சேமி என்பதை கிளிக் செய்து குடும்ப உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
- இருப்பிட சான்றிதழ் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை பதிவேற்ற வேண்டும். மேலும் எரிவாயு இணைப்பு விவரங்களை பதிவு செய்யவும்.
- அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு, உங்களுடைய மொபைல் எண்ணுக்கு ஒரு பதிவு எண் அனுப்பப்படும். பிறகு மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் உங்களுடைய புதிய ரேஷன் கார்டு பெற்றுக்கொள்ளலாம்.