புதிய நிதியாண்டில் ரூ.300 கோடி முதலீடு, 1500 பேருக்கு வேலைவாய்ப்பு – பிலிப்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

0
புதிய நிதியாண்டில் ரூ.300 கோடி முதலீடு, 1500 பேருக்கு வேலைவாய்ப்பு - பிலிப்ஸ் நிறுவனம் அறிவிப்பு!
புதிய நிதியாண்டில் ரூ.300 கோடி முதலீடு, 1500 பேருக்கு வேலைவாய்ப்பு - பிலிப்ஸ் நிறுவனம் அறிவிப்பு!
புதிய நிதியாண்டில் ரூ.300 கோடி முதலீடு, 1500 பேருக்கு வேலைவாய்ப்பு – பிலிப்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

உலகளாவிய வணிக சேவை மையத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் பிலிப்ஸ் நிறுவனம் இந்தியாவில் ரூ.300 கோடி முதலீட்டுடன் சுமார் 1,500 பேரை பணியில் அமர்த்த இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

முதலீடு & வேலைவாய்ப்பு:

நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான பிலிப்ஸ் தனது சேவைகளை உலகளவில் விரிவுபடுத்தும் நோக்கத்தில் இந்தியாவிலும் அதன் சேவைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதாவது இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடி ரூபாய் முதலீட்டுடன் சேவைகளை அதிகரிப்பதாக பிலிப்ஸ் நிறுவனத்தின் குளோபல் தலைமை நிர்வாக அதிகாரி பிரான்ஸ் வான் ஹவுடன் தெரிவித்துள்ளார்.

சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தம் – குடியரசுத் தலைவர் வருகை எதிரொலி!

இதற்காக இந்தியாவை சேர்ந்த 1,500 பேரை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புனேயில் செயல்பட்டு வரும் பிலிப்ஸ் நிறுவனத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் வான் ஹவுடன் கூறியுள்ளார். அதாவது, ‘பிலிப்ஸ் நிறுவனத்தின் ஒரு முக்கிய பகுதியாக பெங்களூரில் இயங்கி வரும் கண்டுபிடிப்பு மையத்தில் தயாரிக்கப்படும் மென்பொருள் வளங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது.

மேலும் சென்னையில் உள்ள உலகளாவிய வணிக சேவைகள் மையத்தையும் நாங்கள் விரிவுபடுத்த விரும்புகிறோம். எனவே இந்தியாவில் பிலிப்ஸ் நிறுவனத்திற்கான வேலைவாய்ப்பு வலுவாக உள்ளது. அதன்படி குறைந்தபட்சம் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பை விரிவுபடுத்துவதற்காக தற்போது திட்டமிடப்பட்டுள்ளது’ என செய்தியாளர்களின் சந்திப்பின் போது வான் ஹவுடன் தெரிவித்துள்ளார். பிலிப்ஸ் நிறுவனத்தின் கவனம் இந்தியாவிற்கு திரும்பியதற்கான நோக்கம், சிறந்த சந்தை அமைப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இந்தியாவில் இருக்கும் திறமையாளர்களை மென்பொருள் நிறுவனங்கள் நன்றாக பயன்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா தொற்று நோய் காலத்தில் இந்நிறுவனத்தின் உற்பத்தி எழுச்சியைக் கண்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், கொரோனா சிகிச்சைக்கான வென்டிலேட்டர்கள் மற்றும் மானிட்டர்கள் போன்ற முக்கியமான பராமரிப்பு உபகரணங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. மறுபுறத்தில், அந்நிறுவனத்தின் வழக்கமான நடைமுறை வணிகம் வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!