அனைத்து ரேஷன் கடைகளிலும் புதிய செயல்முறை திட்டம் அறிமுகம் – மகிழ்ச்சியில் பொதுமக்கள்!
நாட்டில் ரேஷன் கடைகள் மூலம் பல லட்சம் ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசுகள் இதனை கருத்தில் கொண்டு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது ரேஷன் கடை செயல்முறைகளில் புதிய மாற்றம் கொண்டு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செயல்முறை:
இந்தியாவில் உள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களின் வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு ரேஷன் கடைகளில் மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் அரசானது ஒவ்வொரு நாளும் மக்களின் தேவைகளை அறிந்து புதிய திட்டங்களில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடை செயல்முறைகளை முற்றிலும் மாற்றுவது தொடர்பாக அரசானது ஆலோசித்து வருகிறது. ரேஷன் கடைகள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், இதை தவிர ஹெல்ப் லைன் எண் வசதி இன்னும் சிறப்பாக அமையும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
நாடாளுமன்றத்தில் நிலைக்குழு பொது விநியோக திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளர்களின் குறைகளை தீர்ப்பதற்கும், ரேஷன் பொருட்களில் கருப்பு சந்தைப்படுத்துதலை கண்காணிப்பதற்கும் ஹெல்ப்லைன் எண் அமைப்பை மேம்படுத்துவதற்காக சிசிடிவி கேமராக்களை பொருத்த பரிந்துரை செய்துள்ளது. எஃப்சிஐ குடோன்களில் உணவு தானியங்களை கூட்டாக ஆய்வு செய்தாலும், உணவு மற்றும் பொது விநியோக துறையில் தர கட்டுப்பாடு பிரிவு இருந்த போதிலும் உணவு தானியங்களின் தரம் குறைந்துள்ளதாக பயனாளர்களிடம் இருந்து புகார்கள் வருவதாக ஜூலை 19 ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் நிலைக்குழு தெரிவித்துள்ளது.
தமிழக ரேஷன் பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் மூலம் புகார்!
இது சில இடைத்தரகர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்றும் இவர்கள் நல்ல தரமான உணவுப்பொருட்களை வேறு இடங்களுக்கு எடுத்து செல்கின்றனர். இதனால் ஏழை மக்களுக்கு சரியான அளவில் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை. பயனாளிகளின் குறைகளை தீர்க்க 1967 மற்றும் 1800 என்ற எண்கள் மூலம் 24 மணி நேரமும் குறை தீர்க்கும் அமைப்பு உள்ளது. ஆனால் இதன் மூலம் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எந்த பலனும் இல்லை என்றும் இந்த நிலைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக செயல்படுத்தப்பட இருக்கும் ஹெல்ப்லைன் எண்களின் சரியான செயல்பாடு பொது விநியோக முறையை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொது பொறுப்புணர்வை மேம்படுத்தும் என இந்த குழு கூறியுள்ளது. மாநில அரசுகள் இந்த ஹெல்ப்லைன் எண்ணின் செயலாக்கத்தை விரிவுபடுத்தி ரேஷன் கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் இந்த குழுவானது பரிந்துரைத்துள்ளது.