தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க புதிய நடைமுறை – அமைச்சர் தொடக்கம்!
தமிழக ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்க புதிய நடைமுறையை அமைச்சர் சக்கரபாணி மற்றும் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளனர்.
தமிழக ரேஷன் பொருள்கள்:
தமிழகத்தில் உள்ள சென்னை திருவல்லிக்கேணி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்க கண் கருவிழி பதிவு நடைமுறையை அரசு அறிமுகம் செய்துள்ளது. ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்குவதில் மக்கள் பல இடர்பாடுகளை சந்தித்து வரும் நிலையில் தற்போது இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
பயோமெட்ரிக் முறையில் உணவு பொருட்கள் அனைத்தும் ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகையை பதிவு செய்த பிறகு விநியோகிக்கப்படுகிறது. ஆனால் இந்த முறையால் வயதானவர்களுக்கு சரிவர தங்களின் கைரேகையை பதிவு செய்ய முடிவதில்லை. அதனால் ரேஷன் பொருட்களை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. இது போன்று பல இடர்பாடுகள் உள்ளதால், கண் கருவிழி பதிவு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாகன ஓட்டிகளே.. இனி உங்களுக்கு திண்டாட்டம் தான் – இதை செய்வதற்கு ரூ. 8 லட்சம் கட்டணம்!
Exams Daily Mobile App Download
அதாவது, இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா, தெலுங்கானா, அசாம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கைரேகை பதிவு செய்ய இயலாதவர்களுக்கு கண் கருவிழி சரிபார்க்கும் முறை மூலம் நியாய விலை கடைகளில் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல இந்த நடைமுறையை ஒரு முன்னோட்டமாக தொடங்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த நடைமுறை மாநிலம் முழுவதும் செயல்படுத்த உள்ளதாகவும் அரசு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்