EPFO கணக்கில் பணம் எடுக்க ‘இது’ கட்டாயம் – இம்மாதம் முதல் புதிய நடைமுறை!
பி.எஃப் வாடிக்கையாளர்கள் கொரோனா பரவல் காலத்தில் பயனடையும் வகையில் மத்திய அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் பி.எஃப் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் அவர்கள் முன் தொகை எடுக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஃப் பணம்:
நாட்டில் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் பி.எஃப் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் தங்களது இருப்பு நிதியில் இருந்து மூன்று மாத ஊதியத்தை முன் பணமாக பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. தற்போது இந்த ஆண்டு கொரோனா தொற்று இரண்டாம் அலையாக உருவெடுத்து மக்களை தாக்கி வருகிறது.
தமிழக மின்வாரியம் முக்கிய அறிவிப்பு – மே மாத கட்டணம் செலுத்துதல்!
இதன் காரணமாக கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் மத்திய அரசு பி.எஃப் வாடிக்கையாளர்கள் தங்களது மூன்று மாத ஊதியத்தை முன் பணமாக பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியது. மேலும் இதை திரும்ப செலுத்த வேண்டாம் என்றும் அறிவித்தது. இதை அடுத்து பி.எஃப் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதை இணைக்கவில்லை என்றால் கொரோனா முன்பணம் எடுக்க இயலாது என்று அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
புதிய நடைமுறை இந்த மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் www.epfindia.gov.in என்ற தளம் மூலம் தங்களது கணக்குடன் ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிறுவனம் சார்பில் செலுத்தப்படும் தொகை இந்த மாதம் முதல் கணக்கில் சேர்க்க இயலாது என்றும் கொரோனா முன் தொகையான மூன்று மாத ஊதியத்தையும் வாடிக்கையாளர்களால் எடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.