புதிதாக டிவிட்டரில் தொடங்கியுள்ள பிரச்சனை – போலி கணக்குகள் அதிகரிப்பு!
ட்விட்டர் செயலியில் கணக்குகள் சோதிக்கப்பட்டதாக அறிவிக்க கட்டண விதிகள் நியமிக்கப்பட்ட பின்னர், அதிக அளவில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி கணக்குகள்:
ட்விட்டர் செயலியில் சமீபத்தில் அதிக மாற்றங்கள் நடந்துள்ளது. இந்தியாவில் உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள், பிரதமர் போன்றவர்களின் கணக்குகளில் official என்ற முத்திரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், ப்ளூ டிக் பயனர்களுக்கு மாதம் 8 டாலர் கட்டணம் நிர்ணையிக்கப்பட்டது. இது போன்ற நடவடிக்கைகளால் போலியானவர்கள் எண்ணிக்கை குறையும் என்று நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
ஆனால், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளுக்கு பிறகு தான் போலி கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போலி கணக்குகள் நிரந்தமாக தடை செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் போலி கணக்குகள் குறித்த இந்த செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.