தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் புதிய நடைமுறை – அமைச்சர் வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரேஷன் கடைகள்
தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவான விலையில் ரேஷன் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இலவச அரிசியை பெற்று விட்டதாக கூறி ரேஷன் ஊழியர்கள் கள்ளச்சந்தை விற்று வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த அரிசிகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு சென்று பாலிஷ் செய்யப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதன்பிறகு மீண்டும் தமிழகத்திற்கு வந்து ஆந்திரா பொன்னி, கர்நாடகா பொன்னி என கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் இதனை தடுக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே கூட்டுறவுத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை செயலாளராக சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அவர்கள் மாற்றப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகள், நியாய விலைக் கடைகள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
HCL நிறுவனத்தில் வேலை வேண்டுமா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!
மேலும் இவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் விதிமுறைகள் மாற்றப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அரிசி கடத்தல் நடத்தப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. அதனால் அரிசி கடத்தலை தடுக்க மாநில எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரிசி கடத்தலை தடுக்க தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.