தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்களை குறைக்க புதிய திட்டம் – கல்வித்துறை அதிரடி!
தமிழகத்தில் நாளுக்கு நாள் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதனால் பாலியல் சீண்டல்கள், போதை பழக்கத்திற்கு அடிமையாகுதல் போன்ற விழிப்புணர்வு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பாலியல் சீண்டல்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகளவில் பாலியல் குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால், பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் குற்றங்கள், போதைப்பழக்கத்திற்கு அடிமையாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக புராஜக்ட் பள்ளிக்கூடம் என்கிற ஒரு திட்டம் கடந்த ஜூலை 30 ஆம் தேதி முதல் துவங்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு பள்ளியிலும் 10 வயதிற்கு கீழுள்ள குழந்தைகள் மற்றும் 10 வயதிற்கு மேலுள்ள குழந்தைகள் என இரண்டு பிரிவுகளாக பிரித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இது வரைக்கும் தமிழகத்தில் உள்ள 560 பள்ளிகளில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் குற்றங்கள், சீண்டல்கள், போதை பொருட்கள் தடுப்பது மற்றும் சமூக வலைதளங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வினை ஏற்படுத்த ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இருந்து இரண்டு காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு குழந்தைகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வின் மூலமாக பல குழந்தைகள் தாமாகவே முன்வந்து தங்களது பிரச்சனைகளை பகிர்ந்துள்ளனர்.
Post Office ல் மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம் – முழு விவரங்கள் இதோ!
Exams Daily Mobile App Download
மேலும், இந்த விழிப்புணர்வின் மூலமாக குழந்தைகளுக்கு காவலர்கள் மீதுள்ள அச்சம் குறைந்துள்ளது. இதனால், எந்த பிரச்சனை என்றாலும் குழந்தைகள் தாமாகவே முன்வந்து பிரச்சனைகளை கூறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் குற்றங்கள் குறையலாம் என கூறப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு ஒருமுறை மட்டும் இந்த விழிப்புணர்வினை ஏற்படுத்திவிட்டு நின்றுவிடாமல் அடிக்கடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்